பயம் அறியான்
Cast: ,
Direction:
Production:
Music:
பயம் அறியான் - விமர்சனம்
<p>மொட்டைத் தலையுடன் முரட்டுப் பார்வையுடன் திரியும் கதாநாயகன் எடுபிடிகள் நான்கு பேர் ஒரு போலீÞ அதிகாரி இவர்களுக்குள் நடக்கும் கதைதான் பயம் அறியான். </p>
<p> </p>
<p>வெட்டிப் பயலாகத் திரியும் கதாநாயகன் அவனது கூட்டாளிகள் இவர்களை பணத்துக்காக தான் செய்யும் குற்ற செயல்களுக்கு பயன்படுத்துகிறார். ஒரு சமயத்தில் தன்னால் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டவனே தனது மனைவியின் கற்பை சூரையாடிவிட எல்லோரையும போட்டுத்தள்ள ஆரம்பிக்கிறார். முடிவில் கதாநாயகனுக்கும் போலீÞ வில்லனுக்கும் நடக்கும் சண்டையில் இருவரும் பலியாகின்றனர் இதுதான் கதை. </p>
<p> </p>
<p>படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை வசனங்களில் கொஞ்சம் ஓவராக விளையாடியிருக்கிறார் இயக்குனர். வெட்டிப் பேச்சுகளிலும் சரி, கதாநாயகன் நாயகி சந்திப்புகளிலும் சரி ஒரே இரட்டை அர்த்த வசனங்கள். குடிப்பது, கும்மாளமிடுவது, ஊர் சுத்துவது, திருடுவது. இது போன்ற காட்சிகளை தமிழ் சினிமாவில் எத்தனை காலம்தான் காண்பிப்பார்களோ தெரியவில்லை. </p>
<p> </p>
<p>கதாநாயகன் நாயகி இருவரும் காதல் காட்சிகளில் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள். </p>
<p> </p>
<p>நண்பர்களாக வரும் கொட்டாக்குச்சி, காதல் சுகுமார் வரும் காட்சிகளில் கலகலப்பாக்குகிறார்கள். </p>
<p> </p>
<p>அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். </p>
<p> </p>
<p>படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவுதான். பாடல்களில்களில் வரும் அம்மா பாடல் மனதில் நிற்கிறது. மற்றபடி காட்சிகளில் கொஞ்சம் விரசமில்லாமல் செய்திருந்தால் படம் நன்றாய் இருந்திருக்கும். </p>
<p> </p>
<p>"பயம் அறியான்" பயமில்லை. </p>

