இந்திய விமானப் படையில் சச்சினுக்கு குரூப் கேப்டன் அந்தஸ்து

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு விமானப் படையில் குரூப் கேப்டன் என்கிற கௌரவ பதவி வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து விமானப் படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாதனையாளர்களுக்கு இந்திய ராணுவத்தின் முப்படைகளில் கெüரவ பதவிகளை வழங்குவது வழக்கம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோருக்கு இத்தகைய கெüரவப் பதவிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சச்சினுக்கு விமானப்படையில் குரூப் கேப்டன் பதவி அளித்து கெüரவிக்கப்படவுள்ளது. கிரிக்கெட்டில் சச்சின் படைத்துள்ள சாதனைகளை கெüரவிக்கும் விதமாக இந்த பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளது. சச்சினுக்கு விமானப் படையில் கெüரவ பதவி அளிப்பதன்மூலம், படையில் சேர்வதற்கு இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சச்சினுக்கு குரூப் கேப்டன் பதவியை அளிப்பதற்கான ஏற்பாடுகளை விமானப் படை செய்து முடித்துள்ளது. குடியரசுத் தலைவரும், பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த கெüரவப் பதவி சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்படும்.

சச்சின் பெருமிதம்: குரூப் கேப்டன் கெüரவப் பதவி தனக்கு வழங்கப்படவுள்ளது பெருமிதம் அளிக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். லண்டனிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்த கெüரவம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விமானப் படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளது இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கிறது.

இந்திய விமானப் படையின் விளம்பரத் தூதராக பணியாற்றவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு அளிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கெüரவத்துக்காக மீண்டும் ஒரு முறை வணங்குகிறேன் என்றார் அவர். 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com