இரட்டை வசதி கொண்ட கூல்பேட் ஸ்மார்ட்போன்கள்-ரிலையன்ஸ் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது
சென்னை,அக்-14,-ரிலையன்ஸ் வெப்ஸ்டோர் மற்றும் கூல்பேட் கம்யூனிக்கேசன்ஸ் நிறுவனங்கள் இணைந்து கூல்பேட்2939 என்ற இரட்டை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த மொபைல் போன்களை ரிலையன்ஸ் வெப் ஸ்டோர் நிறுவனத்தின் தமிழக பிரிவின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் சந்திரவல்லி,கூல்பேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாமி அல்-லாவாடி மற்றும் சோம சேகர் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
கூல்பேட் 2938 டியூயல்-மோட் டச்ஸ்கீரின் ஸ்மார்ட்போன்கள் சிடிஎம்ஏ மற்றும் ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது.இதற்கென இரண்டு பிரத்யேக சிம்கார்டு பகுதிகள் உள்ளன.இதில் ஜிஎஸ்எம் சிம்கார்டு டிரை-பாண்ட் உள்ளது.
சிடிஎம்ஏ நுட்பம் 800 மெகா கெர்ட்ஸ் உடையது.மேலும் ஜிஎஸ்எம்-சிடிஎம்ஏ-வுக்கெனவெவ்வேறு அழைப்பு வசதிகள் உள்ளது.இதன் மூலம் விரும்பும் இணைப்பு வசதியை பெறவும்,இரண்டு நுட்பத்தையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்முடியும்.கூல்பேட்2938 போன்கள் ரூ.10,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ்ஏடிஏ குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் வெப்ஸ்டோர்ஸ் மூலம் விற்பனை செய்யப்படும் இந்த மொபைல்போன்கள் தமிழ்நாட்டில் உள்ள 150 வெப் ஸ்டோர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் மொபைல் ஸ்டோர்களில் கிடைக்கும்,

