உலக ஸ்குவாஷ் இந்தியா தோல்வி
பாடர்பார்ன்: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
ஜெர்மனியில் உள்ள பாடர்பார்ன் நகரில், அணிகளுக்கு இடையிலான ஆண்கள் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த காலிறுதி சுற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இதில் அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியாவின் சவுரவ் கோசால், சித்தார்த் சச்தே தோல்வி அடைந்தனர். ஹரிந்தர் பால் சிங் சாந்து (இந்தியா)-ஸ்டீவர்ட் போஸ்வல் (ஆஸ்திரேலியா) மோத இருந்த போட்டி நடக்கவில்லை. இந்திய அணி, 5-8 இடங்களுக்கான போட்டியில், இத்தாலி அணியை எதிர்கொள்கிறது.
Tags

